ஞாயிறு, 12 ஜூன், 2011

என்ன செய்ய போகிறது ?

பாஸ்கோ!
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் - எங்களின் கண் முன்னே
சூறையாடப்படுவதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என
மூன்று நாட்களுக்கும் மேல் ஒரிசா கிராம மக்கள் போராட்ட களத்தில்.
பதினெட்டாயிரம் கோடி ரூபாய் செலவு செய்து அலங்கார பந்தல் போட்டு, ஆயிரக்கணக்கில் மின்விசிறிகளும், பளபளவெனவிரிப்புகளும் ,
சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்கேன்களும் என
தலைநகர் தில்லியில் ராம்தேவ் நடத்த முயன்ற
பகட்டான போராட்டம் அல்ல இது.
வாழ்வா சாவா என பெண்களும் குழந்தைகளும் கொளுத்தும் வெய்யிலில்
எந்த வித விளம்பரமும் இன்றி, கட்டாந்தரையில்.
எங்கே சென்றது மத்திய மாநில அரசுகள்?
ஸ்டார் ஹோடேலில் ராம்தேவுடன் பேச்சுவார்த்தை நடத்திய
மத்திய மந்திரிமார்களே எங்கே சென்றீர்கள்?
எதிரே ஆயுதம் தாங்கிய படைகள், சுட்டெரிக்கும் வெயில் .
உச்சிமீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை என
கிராம மக்கள் .. குறிப்பாக சிறுவர் சிறுமியர் ,பெண்கள் .
பசி வெய்யிலில் தாங்களே அரணாக , கட்டாந்தரையில் குப்புறபடுத்து..
ஒரு முதியவர் ஒரு பாட்டிலில் இருந்து அந்தகுழந்தைகளின் வாயில் துளி துளி தண்ணீர் விடு வதையும், இருக்கும் துளி நீரை படுத்திருக்கும் மக்கள் மீது தெளித்து செல்வதையும் பார்க்க பதறுகிறது .
மக்கள் போராட்டம் வெற்றி பெறவேண்டும் .
தங்களின் வாழ்வாதாரமான துண்டு நிலத்தையும் இழந்து விடுவோமோ என்ற பயத்தில் மக்கள்.
நியாயமான கோரிக்கைகளைகளுக்காக என போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
பணம் புழங்கும் போராட்டமெனில் உடனடி கவனம் செலுத்தும்
மத்திய மாநில அரசுகள் ,
பாஸ்கோ போராட்டத்தில் என்ன செய்யபோகிறது ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக