ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

நான் காண்பதென்ன கனவா அல்லது நனவா?

புத்தம் புது உலகம் -  புத்தக உலகம்..

அண்ணா நூற்றாண்டு நூலகம் ..அரசு மாறியபின் அதை மாற்ற  நடந்த அரசியல் நாடகங்கள் , அதை பற்றி பத்திரிக்கை செய்திகள், எழுத்தாளர்கள்
முற்போக்குசிந்தனையளர்களின் ஆர்பாட்டங்கள் இப்படி பர பரப்பாக பேச பட்ட அந்த நூலகத்தை பார்க்க சமீபத்தில்தான் வாய்ப்பு கிடைத்து..
செல்,  பர்சு  தவிர அனைத்தையும் uலாக்கரில் ஒப்படைத்து விட்டு , செக்யூரிட்டி checkup கு பிறகு உள்ளே நுழைந்தால்..

இதுதான் வாழ்க்கை!

இப்போதெல்லாம் ஓடி ஓடி ரயிலேறி 9.30 க்கு ஆபீஸ் போகும் ஆர்வம் இல்லை.. ஏதோ யோசித்தபடி மவுன்ட் ரிட்டேன் வண்டி பிடித்து , ஜன்னலோரம் அமர்ந்து வேடிக்கை பார்த்துகொண்டு போவதும் நன்றாகத்தான் இருக்கிறது. சைதாபேட் இல் ஏறிய அந்த சின்ன பையன் கையில் பிஸ்கட் டின் , சுருள் முடி, துரு துரு முகம், 10 வயது இருக்கும். வழியில் உட்கார்ந்து பாவம்போல தூங்கி போனான். சேத்துப்பட்டு வரை நல்ல தூக்கம். கண்ணை விழிக்க காத்திருந்த நான், உடம்பு சரியில்லையா னு கேட்ட வுடன் சிரித்தபடி இல்லைன்னு பளிச்சுனு சொன்னது அழகா இருந்தது. 1.எங்கே இருந்து வர?2.ஏன் இந்த நேரத்தில் பிஸ்கட் விக்கற?3.பசிக்குதா, ஏதாவது சாப்பிடுறியா ? என்ற என் கேள்விகளுக்கு டாண் டாண் னு 1. தாம்பரம் . 2.வேலைக்கு போறேன்.3. ஒண்ணும் வேண்டாம் அக்கானு பதில் சொன்னது