வெள்ளி, 1 அக்டோபர், 2010

வாழ்க்கை

வாழ்க்கை பயணத்தில் ஓட்டமும் நடையுமாக ..
சந்திக்கும்,மனிதர்கள் , கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் ..
கிடைக்கும் அனுபவங்கள்..உற்சாகமாகும் மனது!
மறந்துபோகும் சிலசமயம் சில விஷயங்கள்..
தொடர்ந்துவரும் சில நினைவுகள் எப்போதும்..
அந்த காவலாளியும் உடன் வந்த தோழரும் , நான் சந்திக்க மறுத்த
முகம் அறியாத அந்த நபரும்..அன்றைய நிகழ்ச்சி..
எதனையோ இழந்து எதனையோ அடைகிறோம் !
இப்படித்தான் வாழ்க்கை!!
இன்று புதிதாய் பிறந்தேன்!

ஞாயிறு, 28 மார்ச், 2010

நினைவுகள்

நினைவுகள் உதிருமா?
காய்ந்து போன சருகுகள் போல,
காற்றடித்தால் பொலபொலக்கும் வேப்பம்பூ போல
மணம் வீசி மலர்ந்து விழும் பவழமல்லி போல
குலுக்கினால் கொட்டிவிடும் அருநெல்லி போல
நினைவுகள் உதிருமா?
காலத்திற்கும் கலையாமல் உற்சாக ஊற்றாக
உள்ளுக்குள் நிறைந்து நிற்கும் நினைவுகள்
கலர் கலராய் மனசுவற்றில் பதிந்து நிற்க,
நினைத்த மாத்திரத்தில் உடம்பை குலுங்க வைக்கும்..
கண்களை குளமாக்கும்..முகத்தில்
நெருப்புவீசும் பார்வைகள்,வார்த்தைகள் , நடத்தைகள் போன்ற
வேண்டாத நினைவுகளை மட்டும்
நம் நினைவு பேழையில் இருந்து
உதிர்த்து விட முடியுமா?