புதன், 1 ஜூன், 2011

முகமூடிகள்

இத்தனை வருட தொழிற்சங்க அனுபவத்தில் இது போன்ற மோசமான நிகழ்வுகளை
கண்டதில்லை..எங்கே செல்லும் இந்த பாதை என வேதனைபடவைக்கும் விஷயங்கள்..
மிகவும் மூத்த தோழர்களுடன் வேலைசெய்தபோது கிடைத்த அனுபவங்களுக்கும்,
இப்போது தலைவர்களாக வலம் வரும் தோழர்களின் அணுகுமுறைகளுக்கும் எத்தனை இடைவெளி?
தொழிற்சங்க கூட்டத்தில் எதிர் அணியை விமர்சித்தல் ஏற்கப்படும்..ஆனால் அணிக்குள் விமர்சனம் என்பது ?
விளக்க கூட்டம் , அறிக்கை சமர்ப்பித்தல்இதில் பேச்சு இடமில்லை. பிரச்னையும் இல்லை.
ஆனால் வேறு செயல்பாடுகளை பற்றி விமர்சிக்கும் சமயங்களில் கிடைக்கும்
அனுபவம் .. அமைதிகாப்பவர்கள் , ஆமோதிப்பவர்கள் பொறுப்பில் இருபவர்களின் செல்ல பிள்ளைகளாக வலம் வர முடியும்.
விமர்சிப்பவர்கள் தனிமைப்பட்டு ஒதுக்படுவது வாடிக்கையான வேடிக்கை.
பூர்ஷ்வா பூர்ஷ்வா என்று சொல்கிறார்களே ?
முற்போக்கு கருத்துக்களுக்கு சொந்தகாரகள் என்று சொன்னால் மட்டும் போதாது..வடக்கு, தெற்கு என கட்சி கட்டி, தனிநபர் வழிபாட்டில் மயங்கி நிற்கும் , குழு மனோபாவங்களுடன் கூறு போடும் போக்கினால்,
நடைமுறையில் மம்தாகளும், ஜெயாக்களும் முன்னேறும்போது,
பெண்ணகளின் முன்னேற்றம் மாதர்சங்கங்களிலும்,ஒருங்கினைப்புகுழுக்களிலும் மட்டும் முடிந்துவிடாமல்
இருக்க வேண்டுமானால் , தொழிற்சங்க அரங்குகளில் முற்போக்கு முகமூடிகள் நடத்தும் நாடகங்கள் முடிவுக்கு வரவேண்டும்.
ஆணும் பெண்ணும் நிகரென கொள்ளவதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக