ஞாயிறு, 30 டிசம்பர், 2012

நெஞ்சு பொறுக்குதில்லையே !

நெஞ்சு பொறுக்குதில்லையே !
 

பெண்களின் மீது நடத்தப்படும் பாலியல் கொடுமைகளின் முத்தாய்பாக நடந்தேறியது.
டெல்லி மருத்துவமாணவி யின்  பாலியல் பலாத்காரம் .
65 ஆண்டு சுதந்திரம்  பெண்களுக்கு  பெற்று  தந்துள்ள  பெருமை! கொடூரமான தாக்குதலுக்கு உள்ளான  அந்த பெண் 
13 நாள்  சிகிச்சை பலனின்றி இறந்துபோனது ,
 இந்திய அன்னையின் மீது விழுந்துள்ள பேரிடி . .
 இன்னும் ஒரு மகளை இந்த  அரசின் கையாலாகாத போக்கினால் பறிகொடுத்து பதறி நிற்கிறாள் இந்தியா . 
 நாடு  முழுதும் நகரமோ கிராமமோ பெண் என்ற அளவில்   
நிதம் நிதம் நிகழும் கொடுமைகள்  இன்னும் எத்தனை  காலம் தொடரும்?  கண்ணீருடன் நியாயம் கேட்டு  வெகுண்டு நிற்கும் சாதாரண மக்களுக்கு என்ன பதில் சொல்லபோகிறது இந்த அரசாங்கம் ?டில்லி நகரமே ஸ்தம்பித்தது மக்களின் எழுச்சி கண்டு . மனித சங்கிலி போராட்டங்களும் ,ஊர்வலங்களும்,  இனியும் பொறுக்க மாட்டோம் என்பதை 
 தெள்ள தெளிவாக எடுத்துக்காட்டிய பின்னும், அரசு மெத்தன போக்கை தொடருமானால்  மத்திய  அரசிற்கு அவமானம்  வேறெதுவும் இல்லை .
டில்லியை தொடர்ந்து  வெளிச்சத்திற்கு  வரும் பாலியல் சித்ரவதைகள்,கொலைகள்,தற்கொலைகள்.. ஆட்சியாளர்கள்  அவசர நடவடிக்கைளை உடனுக்குடன்  செயல்படுத்தவேண்டிய கட்டாயத்தை உணர்த்துகிறது.
காவல் துறையும் ,நீதித்துறையும் 2 கண்களாக செயல்பட  இன்னும் எத்தனை பெண்களை இழக்க போகிறோம்?
 33% சத இட ஒதுக்கீடு பற்றி இப்போதாவது அரசு சிந்திக்குமா?
 இல்லை அரசியல் கட்சிகள் இன்னும் கூட பாராளுமன்ற  தொடர்களில் அரசியல் ஆதாயத்திற்காக நாடகமாடிகொண்டே
 பெண்களுக்காக குரல்கொடுப்போம் என ஏமாற்றபோகிறார்களா ?  
ஆணும் பெண்ணும் சரி நிகர் 
என்ற சிந்தனையை ஊட்டும் பள்ளி கல்வி முறையும் ,
அதை இயல்பாக மனதில் பதிய வைக்கும் வாழ்க்கை முறையும்  
நமது உடனடி கடமையாக நம் முன் நிற்கிறது.