வியாழன், 22 மார்ச், 2012

ரசமிழந்த முகங்கள்

மனவெளி தகர்ந்து தவிடு பொடியாகும்

உள் மன ஆழத்தில் பூகம்பம் வெடிக்கும்.

நட்பு, தோழமை ரிக்டர்களை கடந்து

முற்போக்கு முகம் வழியே

முழுமையாய் வெடித்து விழும்

பிற்போக்கு பூதம்.

ஆணும் பெண்ணும் நிகரேனும் அலங்காரமாய்

தட்டிகளில் மட்டுமே

பாரதீ!

வித விதமாய் மேற்கோள்கள்

விறு விறுப்பான சிறப்புரைகள்.

கூசாமல் பேசி மெருகேறும் தலைமை,

விமர்சனம் வந்திட்டால் கொக்கிபோடும்

வினோதங்கள்!

நேராக பாயும் கூரான பதில்களால்

மீசைகளின் பின்னே

ரசமிழந்த முகங்கள் !

கொள்கைகள் மறந்துபோக

கோபத்தில் கொப்பளிக்கும்

தோல்வியை மறைத்துக்கொள்ள

துரோகத்தை கைகொள்ளும்

அகங்கார நடைமுறையை

அதிரடியாய் அரங்கேற்றும்

நம்பிக்கைகள் சிதறிவிழும்

இடிந்து போன மனவெளியில்

இத்தனை இடர்பாடுகளுக்கும் பின்

இன்று புதிதாய் பிறந்தேன்

இன்னும் புதிதாய் வளர்வேன்

தளராத உறுதியுடன்

பாரதி பெண்ணாய் !

1 கருத்து:

  1. வணக்கம்...

    நல்ல பகிர்வு... தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை…

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_2.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    பதிலளிநீக்கு